சித்திரைசாவடி அணையில் மூழ்கி இருவர் பலி. மூவரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்.

கோவை பேரூர் அடுத்து சிறுவாணி சாலை அருகே உள்ள சித்திரைசாவடி அணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையால் நிரம்பியது.

இந்நிலையில் இரத்தினபுரியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட ஐந்து பேர் இன்று அணைக்கு விடுமுறையையொட்டி குளிக்க சென்றனர். 

அப்போது  எதிர்பாராத விதமாக சேற்றில் சபரி (17) மற்றும் ஹரிபிரகாஷ் ஆகியோர் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கண் முன்னே நண்பர்கள் சேற்றில் சிக்கி இறந்ததை கண்டு உடன் வந்த நண்பர்கள் கதறினர்.

இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த சபரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஹரிபிரசாத்தின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் இறந்தவர்களின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...