எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை உடனடியாக பதவி விலக கோரி, மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும் - மாநில செயலாளர் முத்தரசன்


எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை உடனடியாக பதவி விலக கோரி, வருகின்ற அக்டோபர் மூன்றாம் தேதி மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில், செய்தியாளர்களிடம் பேசியவர் இதனை தெரிவித்தார். மக்கள் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுகளை இழந்து மைனாரிட்டி அரசாக ஆட்சி நீடித்து வருவதாக குற்றம்சாட்டினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்தியில் ஆளும் கட்சியின் பிரதிநிதியாக செயல்படக்கூடாது எனவும், புதிய ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்டுவதுடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென முத்தரசன் தெரிவித்தார்.



எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கோடிக்கணக்கான ரூபாய் அரசு பணம் செலவழிக்கப்பட்டு அரசியல் பேசுவது ஜனநாயகத்திற்கு புறம்பானது எனவும், நடிகர் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறக்க முதலமைச்சர் செல்வதை யாரோ தடுப்பதால் அந்நிகழ்ச்சிக்கு அவர் செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் ஒரு நாடகம் எனவும், கண் துடைப்புக்காக நடத்தப்படும் இந்த விசாரணையால் எந்த பலனும் இல்லை என கூறிய அவர், அவரது மரணம் தொடர்பாக உண்மை வெளிவர வேண்டுமெனில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், தமிழக பொறுப்பு ஆளுநர், லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டுமென கூறியவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை அல்லது பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...