நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலையில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அருகில் வெடி சத்தம் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை செய்தியாளர்கள் மற்றும் தினகரன் பத்திரிகை செய்தியாளர் உள்ளிட்ட மூவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பணகுடி காவல் ஆய்வாளரைக் கண்டித்தும், வழக்கை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை கடும் தாக்குதலை நடத்தியதை கண்டித்தும், வழக்கு பதிவு செய்த பணகுடி காவல் ஆய்வாளரை கண்டித்தும், வழக்கை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை பத்திரிகையாளர்கள் மன்றத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை கடும் தாக்குதலை நடத்தியதை கண்டித்தும், வழக்கு பதிவு செய்த பணகுடி காவல் ஆய்வாளரை கண்டித்தும், வழக்கை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை பத்திரிகையாளர்கள் மன்றத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.