மும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 22 பேர் பலி

மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலைய மேம்பாலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாகவே காணப்படும். குறுகிய நடைமேடை மேம்பாலத்தில் பயணிகள் சென்று கொண்டிருக்கும் போது, மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியது. இதனால், அங்கிருந்து மக்கள் ஓட முயன்றனர்.

நடைமேடை மேம்பாலத்தில் கூட்டம் அதிகரித்திருந்ததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி மூச்சு திணறி 3 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். விபத்து நேரிட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று உதவியில் ஈடுபட்டது. தீயணைப்பு குழுவும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நேரத்தில் இந்த விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...