மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக - கேரள எல்லையோர வனப்பகுதியில் உள்ள சிறுவாணி அணை, கோவை மாவட்டத்தின் முக்கியமான நீராதாரமாக உள்ளது. இந்த அணையில் இருந்து பெறப்படும் நீர், மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை குறைந்ததால், அணையில் நீர் தேக்க முடியாத சூழல் நிலவியது.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கினாலும், சிறுவாணி அணைக்கு ஓரளவு நீர்வரத்து இருந்தது.
கடந்த சில நாட்களாக கேரள வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளான முத்திகுளம், பாம்பாறு, பட்டியாறு ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவும் கணிசமாக கூடியிருப்பதால், ‘டெத் ஸ்டோரேஜ்’ எனப்படும் இறுதிகட்ட கொள்ளளவை நீர்மட்டம் எட்டியுள்ளது.
சிறுவாணியின் அடிவாரத்தில் 24 மி.மீ. மழையும், அணைப்பகுயில் 102 மி.மீ. மழையும் பெய்துள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால், மொத்த கொள்ளளவை விரைவில் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நீர் இருப்பு 877.50 டி.எம்.சி. ஆகும். பாசன வசதிக்காக அணையில் இருந்து நாளொன்றுக்கு வினாடிக்கு 75.50 மில்லியன் லிட்டர் நீர் திறக்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கினாலும், சிறுவாணி அணைக்கு ஓரளவு நீர்வரத்து இருந்தது.
கடந்த சில நாட்களாக கேரள வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளான முத்திகுளம், பாம்பாறு, பட்டியாறு ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவும் கணிசமாக கூடியிருப்பதால், ‘டெத் ஸ்டோரேஜ்’ எனப்படும் இறுதிகட்ட கொள்ளளவை நீர்மட்டம் எட்டியுள்ளது.
சிறுவாணியின் அடிவாரத்தில் 24 மி.மீ. மழையும், அணைப்பகுயில் 102 மி.மீ. மழையும் பெய்துள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால், மொத்த கொள்ளளவை விரைவில் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நீர் இருப்பு 877.50 டி.எம்.சி. ஆகும். பாசன வசதிக்காக அணையில் இருந்து நாளொன்றுக்கு வினாடிக்கு 75.50 மில்லியன் லிட்டர் நீர் திறக்கப்படுகிறது.