நவராத்திரி பண்டிகையின் கொலு வழிபாடுகளில் ஜெயலலிதாவின் சிலைகள் - ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்

முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் கடந்த 21-ம் தேதி தொடங்கி நாளை (29.09.2017) வரை கொண்டாடப்படுகிறது.  நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம். 

மேலும், நவராத்திரி விழாவையொட்டி பல்வேறு கோயில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கொலு வைத்து வழிபாடு நடத்துகின்றனர். கொலு பொம்மைகளில், பெரும்பாலும் கடவுள்களின் சிலைகளே இடம் பெற்றிருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் போது, கொலு பொம்மைகளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொம்மைகலும் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். 



ஜெயலலிதா என்றாலே, அவர் முதலமைச்சராக இருந்த போது உடுத்திய பச்சை நிற ஆடையுடன்தான் நியாபகத்திற்கு வருவார். எனவே, பச்சைநிற சேலை அணிந்தது போன்றே ஜெயலலிதாவின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தில் கொலு வைக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இது தொடர்பாக ஆர்.எஸ்.புரத்தில் இருக்கும் கொலு பொம்மைகள் விற்பனையாளர் பேசுகையில், ஜெயலலிதா போன்ற கொலு பொம்மைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். பச்சை நிறம் கொண்ட சேலையுடன் இருக்கும் பொம்மைகளை மக்கள் அதிகளவு விரும்புகின்றனர். தற்போது, ஜெயலலிதாவின் கொலு பொம்மைகள் விற்றுத் தீர்ந்து விட்டன. இவ்வாறு, அவர் கூறினார். 

இரும்புப் பெண்மணியான ஜெயலலிதா, தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டின் வேறு மாநிலங்களிலும் உள்ள பெண்களுக்கு, முன்மாதிரியாக இருந்து வருகிறார். 

கொலு பூஜையில் ஜெயலலிதாவின் பொம்மைகள் இடம் பெறுவது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பேசுகையில்,  தமிழக பெண்கள் ஜெயலலிதாவை, தங்களது காப்பாளராக பார்க்கின்றனர். கொலு பூஜையில் அவரது சிலை கடவுலுக்கு நிகராக மதித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

ஜெயலலிதா போன்ற கொலு பொம்மைகள் ரூ.250 முதல் ரூ.1,200 வரையில் பல்வேறு அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் கோவை பூம்புகார் கைவினைப் பொருட்கள் அங்காடியில் ஜெயலலிதாவின் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...