கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.09.2017) விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் உப்பிலிபாளையம் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்து தனியார் கட்டுமான நிறுவன குடியிருப்புகள் அமைக்கப்பட்டதற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட சிலர் பாராட்டு தெரிவித்தனர்.

அப்போது, அதற்கு குடியிருப்பு சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துடன், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், இது தொடர்பாக பேசக்கூடாது என தெரிவித்தனர். குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பேசியதால், அரங்கில் இரு தரப்பு விவசாயிகள் சங்கத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இதனைதொடந்து இரு தரப்பினரையும் மாவட்ட வருவாய் அலுவலர் சமரசப்படுத்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் தொடந்து நடைபெற்றது.
இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் உப்பிலிபாளையம் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்து தனியார் கட்டுமான நிறுவன குடியிருப்புகள் அமைக்கப்பட்டதற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட சிலர் பாராட்டு தெரிவித்தனர்.

அப்போது, அதற்கு குடியிருப்பு சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துடன், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், இது தொடர்பாக பேசக்கூடாது என தெரிவித்தனர். குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பேசியதால், அரங்கில் இரு தரப்பு விவசாயிகள் சங்கத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இதனைதொடந்து இரு தரப்பினரையும் மாவட்ட வருவாய் அலுவலர் சமரசப்படுத்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் தொடந்து நடைபெற்றது.