கோவையில் அதிவேகமாக பேருந்தை இயக்கும் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்- போக்குவரத்து துணை ஆணையர் தகவல்


கோவை மாநகரில் அதிவேகமாக பேருந்துகளை இயக்கும் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

கோவை மாநகரில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.

அரசு பேருந்துகள்

கோவையில் அவ்வப்போது பேருந்துகள் மோதி விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. அரசு பேருந்து ஓட்டுனர்கள் மிக வேகமாக பேருந்தை இயக்குவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, கோவை போக்குவரத்து பணிமனை அதிகாரிகளை சந்திக்க உள்ளேன். தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு அதிக வேகமாக பேருந்தை இயக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்படும். 

அதைத்தொடர்ந்து, ஓரிரு நாட்களில் அதிக வேகத்தில் பயணிக்கும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

போக்குவரத்து போலீசார்

போக்குவரத்து சிக்னல்களில் உள்ள போலீசார், போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் தேவையின்றி செல்போன் உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் மாலை நேரங்களில் நான் ரோந்து சென்று வருகிறேன். அவ்வப்போது சிக்னல்களில் விதிமீறல்கள் நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன்.

சிக்னலில் வெள்ளை கோட்டினை தாண்டி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதி மீறல்களை குறைப்பதன் மூலம், சாலை விபத்துக்களால் உயிரிழப்பதை தடுக்க முடியும். அடுத்தகட்டமாக, தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளேன். 

இவ்வாறு கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...