கோவை மாநகராட்சியின் மக்கள் விரோதப்போக்கினைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

கோவை மாநகராட்சியின் புதியவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை, குப்பைகளுக்கு வரி உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கினை கடைபிடித்து வரும் கோவை மாநகராட்சியினைக் கண்டித்து குறிச்சி, குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் பகுதிக் கழகங்களுக்கு உட்பட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.



இந்த முற்றுகைப் போராட்டத்தில் கோவை மாநகர மக்களைப் பெரிதும் பாதிக்கின்ற மாநகராட்சியின் புதியவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு வைப்புத்தொகை, குப்பைவரி உள்ளிட்ட மாநகராட்சியின் மக்கள்விரோதப் போக்கினைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த பகுதிக்கழகங்களுக்கு உட்பட்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் மற்றும் மாவட்டக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக செயலாளர்கள், குறிச்சி, குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் பகுதிக்கழகங்களுக்கு உட்பட்ட பகுதிக்கழக செயலாளர்கள், வட்டக்கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...