கோவை மாநகராட்சியின் மக்கள் விரோதப்போக்கினைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

கோவை மாநகராட்சியின் புதியவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை, குப்பைகளுக்கு வரி உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கினை கடைபிடித்து வரும் கோவை மாநகராட்சியினைக் கண்டித்து குறிச்சி, குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் பகுதிக் கழகங்களுக்கு உட்பட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.



இந்த முற்றுகைப் போராட்டத்தில் கோவை மாநகர மக்களைப் பெரிதும் பாதிக்கின்ற மாநகராட்சியின் புதியவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு வைப்புத்தொகை, குப்பைவரி உள்ளிட்ட மாநகராட்சியின் மக்கள்விரோதப் போக்கினைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த பகுதிக்கழகங்களுக்கு உட்பட்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் மற்றும் மாவட்டக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக செயலாளர்கள், குறிச்சி, குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் பகுதிக்கழகங்களுக்கு உட்பட்ட பகுதிக்கழக செயலாளர்கள், வட்டக்கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...