கோவை மாவட்டத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் வண்டல் மண் எடுப்பதால் மண்வளம் பாதிக்கப்படுவதாகக் கூறி தவளை, நண்டு, மண்புழு, புழுக்களுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாளான இன்று பல்வேறு தரப்பினர் மனு அளித்தனர். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தவளை, நண்டு, மண்புழு, புழுக்கள் ஆகியவற்றுடன் மனு அளிக்க வந்தனர்.

அப்போது, கோவை மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் எடுப்பதால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், குளக்கரையிலும், நிலத்திலும் வாழும் தவளை, நண்டு, மண்புழு, புழுக்கள் போன்ற உயிரினங்கள் அழிந்து போவதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவான இது போன்ற நுண்ணுயிர்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும், வண்டல் மண் எடுக்கிறோம் என்ற பெயரில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் மழைவளம், நீர் வளம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகப்படியாக வண்டல் மண் எடுப்பதையும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதனைத்தொடந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வழங்கினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாளான இன்று பல்வேறு தரப்பினர் மனு அளித்தனர். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தவளை, நண்டு, மண்புழு, புழுக்கள் ஆகியவற்றுடன் மனு அளிக்க வந்தனர்.

அப்போது, கோவை மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் எடுப்பதால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், குளக்கரையிலும், நிலத்திலும் வாழும் தவளை, நண்டு, மண்புழு, புழுக்கள் போன்ற உயிரினங்கள் அழிந்து போவதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவான இது போன்ற நுண்ணுயிர்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும், வண்டல் மண் எடுக்கிறோம் என்ற பெயரில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் மழைவளம், நீர் வளம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகப்படியாக வண்டல் மண் எடுப்பதையும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதனைத்தொடந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வழங்கினர்.