வடமாநில தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும், அதிக சம்பளம் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றப்படும் வடமாநில தொழிலாளர்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர்ந்தோர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து புலம்பெயர்ந்தோர் சங்கத்தினர் கூறியதாவது:-
கோவை ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 20ம் தேதி அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வடமாநில இளைஞர்கள் சிலரை விற்பனை செய்ததை தடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர். இதுபோக பல வெளிமாநில இளைஞர்கள் கொத்தடிமைகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தவேண்டும். மேலும் வடமாநில தொழிலாளர்களுக்கான பணிபாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்றனர்.

இதுகுறித்து புலம்பெயர்ந்தோர் சங்கத்தினர் கூறியதாவது:-
கோவை ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 20ம் தேதி அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வடமாநில இளைஞர்கள் சிலரை விற்பனை செய்ததை தடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர். இதுபோக பல வெளிமாநில இளைஞர்கள் கொத்தடிமைகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தவேண்டும். மேலும் வடமாநில தொழிலாளர்களுக்கான பணிபாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்றனர்.