கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தீத்திபாளையத்தில் காளம்பாளையம் முதல் வேடப்பட்டி வரை செல்லும் நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்று நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.2.90 கோடி மதிப்பில் உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
மேலும், பாலம் அமைய உள்ள இடத்தினையும் அவர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்று நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.2.90 கோடி மதிப்பில் உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
மேலும், பாலம் அமைய உள்ள இடத்தினையும் அவர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
