கோவை மாநகர் பகுதியில் கடந்த ஆண்டில் 3,212 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன - பூங்கா திறப்புவிழாவில் மாநகராட்சி ஆணையர் பேச்சு


கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள ஜி.ஆர்.ஜி. சந்திரகாந்தி நகர் பகுதியில் பயனற்ற நிலையில் இருந்த பூங்கா, சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் முயற்சியால் புனரமைக்கப்பட்டடது. அனைத்து சீரமைப்புப் பணிகளும் முடிவடைந்த நிலையில், பொதுமக்கள் மற்றும குழந்தைகளின் பயன்பாட்டிற்காக பூங்கா இன்று (25.09.2017) திறக்கப்பட்டது.



இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசுகையில், கோவை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள்,  தன்னார்வ தொண்டு அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சியின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு மட்டும் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3,212 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து பணிகளையும் மாநகராட்சியே செய்வது சிரமம். பொதுமக்கள் பங்களிப்பின்றி நல்ல செயல்கள் நடைபெறாது.



தற்போது திறக்கப்பட்டுள்ள பூங்கா கோவை மாநகராட்சியின் கண்காணிப்பில் இருக்கும். இருந்தபோதும் இந்த பூங்காவை அழகாக வைத்திருப்பது பொதுமக்கள் கையில்தான் உள்ளது. இது போன்ற பூங்காக்கள் பொதுமக்கள் நடை பயணம் மேற்கொள்ளவும், பொழுதுபோக்கிற்காகவும் பயன்படும் இடமாக இருப்பதோடு, உள்ளத்தையும், உடலையும் சீர்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் இணை இயக்குனர் செல்வராஜ் மற்றும் ஜி.ஆர்.ஜி. சந்திரகாந்தி நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...