ஏழு வங்கிகளின் கார்டுகள் மூலமாக மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற தகவலுக்கு இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்து விளக்கத்தினையும் அளித்துள்ளது.
இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, இந்தியன் வங்கி, யுனைட்டைட் பாங்க் ஆப் இந்தியா, சென்டிரல் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி உள்ளிட்ட 7 வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் ரயில் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த தகவலை மறுத்து ஐஆர்சிடிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனைத்து வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளும் பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, இந்தியன் வங்கி, யுனைட்டைட் பாங்க் ஆப் இந்தியா, சென்டிரல் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி உள்ளிட்ட 7 வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் ரயில் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த தகவலை மறுத்து ஐஆர்சிடிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனைத்து வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளும் பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது.