மூத்த பத்திரிகையாளர் கேஜே சிங் மற்றும் அவரது தாய் படுகொலை

கர்நாடகாவில் பிரபல கன்னட எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்டது போன்றே, மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வசிக்கும் மூத்த பத்திரிகையாளர் கேஜே சிங் மற்றும் அவரது 92 வயதுடைய தாயார் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கேஜேசிங் கொலைக்கு சிரோண்மணி அகாலிதள கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கவுரி லங்கேஷை தொடர்ந்து, கேஜே சிங் என அடுத்தடுத்து மூத்த பத்திரிகையாளர்களின் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...