கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவதும் குறித்தும், கோவை மாநகரத்திற்க்கு குடிநீரைக் எப்படி சீராக வழங்குவது பற்றியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நகராட்சத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை மாவட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவின் அரசு, மக்களுக்கான எல்லா திட்டங்களையும் சிறப்பாக செய்து கொண்டு வருகிறது. வரும் டிசம்பர் 3-ஆம் தேதி கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கிறது.
மழை வந்து அணைகள் நிரம்பி வரும் வேளையில், மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். வறட்சியான சூழலில் பொதுமக்கள் பொறுமையுடன் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள். அவர்களுக்கு அரசு சார்பில் நன்றியைக் தெரிவித்து கொள்கிறேன்.
குறிப்பாக சிறுவானி பகுதியில் உள்ள மக்களுக்கு இனி 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சீராக வழங்கப்படும். இன்றிலிருந்து கோவை மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.