தமிழகத்தில் நவோதயா பள்ளி திறக்கக் கோரி கோவையில் பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என பல்வேறு தரப்பினரும், அரசியல் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நவோதயா பள்ளிகளை திறக்கக் கோரியும், அதனை எதிர்க்கும் அரசியல் கட்சியினரைக் கண்டித்தும் இன்று கோவையில் பாஜக-வினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1986 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நவோதயா பள்ளி தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதற்காக தடையில்லாச் சான்றிதழ் வழங்குமாறும் மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறும் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பட்டின் கீழ் இயங்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறப்பதன் மூலம் இந்தி திணிப்பு நிகழக்கூடும், பாஜக-வின் மதவாதக் கொள்கைகள் சிறு குழந்தைகள் மத்தியில் திணிக்கப்படும். ஏற்கனவே, தனியார் பள்ளிகளால் அரசுப் பள்ளிகள் பாதிப்படைந்துள்ள நிலையில் நவோதயா பள்ளியினால் முற்றிலுமாக அரசுப் பள்ளி முடக்கப்படும் எனக் கூறி தமிழகத்தில் அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்கக் கோரியும், அப்பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளைக் கண்டித்தும், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நவோதயா பள்ளிகளினால் கல்வித்தரம் உயருமெனவும், ஏழை மாணவர்களும் போட்டி தேர்வுகளுக்கு தயாராக வாய்ப்பாக அமையுமெனவும் பாஜகவினர் தெரிவித்தனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...