கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களுக்கு முறையாக மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஓட்டுநர்கள், கிளீனர்கள் இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் கூறுகையில், மாத ஊதியம் 1-ம் தேதி முதல் 5-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். ஓட்டுநருக்கு அதிகபட்சமாக ரூ.18 ஆயிரம் மற்றும் கிளீனருக்கு ரூ.12 ஆயிரம் மாத ஊதியமாக உயர்த்தித் தர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அறிவித்த சதவிகிதப்படி இனி வரும் காலங்களில் வழங்க வேண்டும் என்றனர்.
மேலும், பணியாளர் வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர் மற்றும் கிளினருக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பணிக்கு திரும்பும்வரை ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

முன்னதாக, இந்த முற்றுகைப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் கூறுகையில், மாத ஊதியம் 1-ம் தேதி முதல் 5-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். ஓட்டுநருக்கு அதிகபட்சமாக ரூ.18 ஆயிரம் மற்றும் கிளீனருக்கு ரூ.12 ஆயிரம் மாத ஊதியமாக உயர்த்தித் தர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அறிவித்த சதவிகிதப்படி இனி வரும் காலங்களில் வழங்க வேண்டும் என்றனர்.
மேலும், பணியாளர் வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர் மற்றும் கிளினருக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பணிக்கு திரும்பும்வரை ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

முன்னதாக, இந்த முற்றுகைப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் கலந்து கொண்டனர்.