கோவையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், பலர் உயிரும் இழந்தனர். இந்த நிலையில், கோவையில் மேலும் ஒரு குழந்தை டெங்குவால் பலியாகியுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது குழந்தை திவ்யஸ்ரீ (3). கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் திவ்யஸ்ரீ அனுமதிக்கப்பட்டார்.
குழந்தையின் ரத்தமாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, தனிவார்டில் வைத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி திவ்யஸ்ரீ இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவையில் டெங்கு பீதி சற்றே ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு ரோட்டா என்ற சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. 6, 10 மற்றும் 14 மாத குழந்தைகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்படும். இதற்காக கோவை மாவட்டத்தில் 420 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இன்று முதல் விநியோகிக்கப்படும் சொட்டு மருந்தினை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலமாக டெங்குவில் இருந்து குழந்தைகளை காக்கலாம்
கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது குழந்தை திவ்யஸ்ரீ (3). கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் திவ்யஸ்ரீ அனுமதிக்கப்பட்டார்.
குழந்தையின் ரத்தமாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, தனிவார்டில் வைத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி திவ்யஸ்ரீ இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவையில் டெங்கு பீதி சற்றே ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு ரோட்டா என்ற சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. 6, 10 மற்றும் 14 மாத குழந்தைகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்படும். இதற்காக கோவை மாவட்டத்தில் 420 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இன்று முதல் விநியோகிக்கப்படும் சொட்டு மருந்தினை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலமாக டெங்குவில் இருந்து குழந்தைகளை காக்கலாம்