கோவை வெள்ளலூரில் உள்ள ராஜவாய்க்கால், சுண்ணாம்புக் காலவாய், அணைமேடு, குறிச்சிப் பிரிவு, நஞ்சுண்டாபுரம், இட்டேரி, அண்ணா காலனி, முத்து காலனி, சேரன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 வீடுகள் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டன.

ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து சுமார் 6.5 கி.மீ தூரம் வரை பாய்கிறது. வெள்ளலூர் நீர்நிலைத் தொட்டி அருகே கட்டப்பட்டுள்ள மதகுகளின் மேற்புறப் பகுதி, ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை இணைக்கும் சிறு பாதையாக மாறியிருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை பொதுமக்களின் உதவியுடன் அகற்றியது.

குடியிருப்புகளை அகற்றிய போது மிஞ்சிய கழிவுகளும், கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகளும் ராஜவாய்க்காலில் அதிகளவில் கிடக்கின்றன. இதனால், தற்போது, பெய்து வரும் மழையினால், ராஜவாய்க்காலில் செல்லும் மழை நீரை அந்தக் குப்பைக் கழிவுகள் தடுத்து நிறுத்தியுள்ளன.

இதனால், ராஜவாய்க்காலில் நீர் செல்வதற்கு ஏதுவாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து சுமார் 6.5 கி.மீ தூரம் வரை பாய்கிறது. வெள்ளலூர் நீர்நிலைத் தொட்டி அருகே கட்டப்பட்டுள்ள மதகுகளின் மேற்புறப் பகுதி, ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை இணைக்கும் சிறு பாதையாக மாறியிருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை பொதுமக்களின் உதவியுடன் அகற்றியது.

குடியிருப்புகளை அகற்றிய போது மிஞ்சிய கழிவுகளும், கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகளும் ராஜவாய்க்காலில் அதிகளவில் கிடக்கின்றன. இதனால், தற்போது, பெய்து வரும் மழையினால், ராஜவாய்க்காலில் செல்லும் மழை நீரை அந்தக் குப்பைக் கழிவுகள் தடுத்து நிறுத்தியுள்ளன.

இதனால், ராஜவாய்க்காலில் நீர் செல்வதற்கு ஏதுவாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.