கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பொன்னுசாமி (63). தற்போது பணி நீட்டிக்கப்பட்டு அப்பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவர், பொன்னுசாமியின் லேப்-டாப்பை திருடிச்சென்றார்.

ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் அந்த லேப்-டாப்பில் இருப்பதாகவும் உடனடியாக கண்டுபிடித்து தரும்படியும் பொன்னுசாமி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், லேப்டாப்-ஐ திருடிச்சென்ற ஆசாமியின் உருவம் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, லேப்டாப்-ஐ திருடிச்சென்ற மர்ம நபரின் புகைப்படத்தை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவர், பொன்னுசாமியின் லேப்-டாப்பை திருடிச்சென்றார்.

ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் அந்த லேப்-டாப்பில் இருப்பதாகவும் உடனடியாக கண்டுபிடித்து தரும்படியும் பொன்னுசாமி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், லேப்டாப்-ஐ திருடிச்சென்ற ஆசாமியின் உருவம் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, லேப்டாப்-ஐ திருடிச்சென்ற மர்ம நபரின் புகைப்படத்தை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.