பள்ளி மாணவிகள் மாயமான விவகாரம்: முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தேர்வு எழுத மாணவிகளுக்கு அனுமதி



கோவை துடியலூரை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியில் அமிர்தா வித்யாலயா என்ற தனியாருக்கு சொந்தமான பள்ளி இயங்கி வருகிறது. 

இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுமிகள் கடந்த 15-ம் தேதி மாயமாகினர். இது குறித்து, மாணவியின் பெற்றோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததுடன், பள்ளி சென்ற மாணவிகள் மாயமானதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என்று கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, மாணவிகள் இருவரும் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருப்பதாக கோவை மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மாணவிகள் இருவரையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இந்த நிலையில், இன்று பள்ளிக்கு சென்ற இரு மாணவிகளையும் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், முறையான கவுன்சிலிங் பெற்ற பின்னரே மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும் பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் மாணவிகளின் படிப்பு பாதிக்கும் என்று கூறியும், உடனடியாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் மாணவிகளின் பெற்றோர் பள்ளி வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்போது அமிர்தா வித்யாலயா பள்ளி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டதன் பேரில் மாணவியை தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...