தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ்-யில் சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் தங்கமழை திட்டம் துவக்கம்


தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸில் 2017ம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிலையங்கள் மூலம் விற்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு அனைத்து விற்பனை நிலையங்களிலும் 31-08-2018 வரை 30 சதவிகிம் வரை தள்ளுபடி அளித்துள்ளது.

இது குறித்து மண்டல மேலாளர் கூறியதாவது:- கோவையில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு சேலைகள், வேட்டி, சட்டை, குர்தீஸ், சுடிதார், படுக்கை விரிப்புகள் என அனைத்திற்கும் தள்ளுபடி உள்ளது.



பட்டு சேலைகள் 7 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை 15-ற்கும் மேற்பட்ட வகையான சேலைகள் விற்பனைக்கு உள்ளது. இதற்கு 30 சதவிகிதம் தள்ளுபடி உள்ளது. மேலும் பட்டு பூச்சிகளை கொல்லாமல் பட்டு பூச்சிகள் கூட்டை விட்டு வெளியேறிய பிறகு பட்டு நூல் எடுத்து அகிம்சா பட்டினால் தயாரிக்கப்பட்டுள்ள சேலைகள் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மண்டலத்தில் கடந்த ஆண்டு 17 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 20 கோடியாக நிர்ணயம் செய்யபட்டுள்ளது. மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு மொத்த விற்பனை 3.81 கோடிகள், நடப்பாண்டில் விற்பனை குறியீடாக 4.65 கோடி நிர்ணயம் செய்யபட்டுள்ளது" என்றார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...