தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸில் 2017ம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று துவக்கி வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிலையங்கள் மூலம் விற்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு அனைத்து விற்பனை நிலையங்களிலும் 31-08-2018 வரை 30 சதவிகிம் வரை தள்ளுபடி அளித்துள்ளது.
இது குறித்து மண்டல மேலாளர் கூறியதாவது:- கோவையில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு சேலைகள், வேட்டி, சட்டை, குர்தீஸ், சுடிதார், படுக்கை விரிப்புகள் என அனைத்திற்கும் தள்ளுபடி உள்ளது.

பட்டு சேலைகள் 7 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை 15-ற்கும் மேற்பட்ட வகையான சேலைகள் விற்பனைக்கு உள்ளது. இதற்கு 30 சதவிகிதம் தள்ளுபடி உள்ளது. மேலும் பட்டு பூச்சிகளை கொல்லாமல் பட்டு பூச்சிகள் கூட்டை விட்டு வெளியேறிய பிறகு பட்டு நூல் எடுத்து அகிம்சா பட்டினால் தயாரிக்கப்பட்டுள்ள சேலைகள் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை மண்டலத்தில் கடந்த ஆண்டு 17 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 20 கோடியாக நிர்ணயம் செய்யபட்டுள்ளது. மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு மொத்த விற்பனை 3.81 கோடிகள், நடப்பாண்டில் விற்பனை குறியீடாக 4.65 கோடி நிர்ணயம் செய்யபட்டுள்ளது" என்றார்.