காந்திபுரம் பேருந்து நிலையத்தில் “தூய்மையே சேவை” இயக்கப் பணிகள் துவக்கம்

கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் “தூய்மையே சேவை” இயக்க பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் அனைத்து மக்களையும் பங்கு பெறும் வகையிலும், அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தும் வகையிலும், சுகாதாரம் ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையிலும் “தூய்மையே சேவை” இயக்க பணிகள் மாநகராட்சி சார்பாக செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன் தொடக்கமாக கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் சுத்தம் செய்யும் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.



இந்த இயக்கத்தின் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நிலை உருவாக்குதல், கழிவறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்டுதல். அனைத்து பொது இடங்களிலும் சுத்தம் செய்தல். பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், சுற்றுலா மற்றும் வழிபாட்டு தளங்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.



மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த “தூய்மையே சேவை” இயக்க பணிகளுக்கு அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கி, தங்கள் சார்ந்த அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்து கொள்ளுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுகுட்டி, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...