தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணை நிரம்பி வருகிறது. அணை முழுக் கொள்ளளவு 98 அடியை எட்டியதால், வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால், பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மேற்கு தொடர்ச்சி மழையால், கோவையில் முக்கிய நதியாக திகழும் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இரண்டு ஆண்டுக்குப்பின் பேரூரை தாண்டி நொய்யல் ஆறு உக்கடம் குளம் மற்றும் குறிச்சிக் குளங்களை நோக்கி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மேற்கு தொடர்ச்சி மழையால், கோவையில் முக்கிய நதியாக திகழும் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இரண்டு ஆண்டுக்குப்பின் பேரூரை தாண்டி நொய்யல் ஆறு உக்கடம் குளம் மற்றும் குறிச்சிக் குளங்களை நோக்கி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
