கோவை, மாதம்பட்டி ஈஷா அவுட்ரீச், சோழா குழுமம் மற்றும் அரவிந் கண் மருத்துவமனையுடன் இணைந்து ஈஷா யோகா மையத்திற்க்கு அருகில் உள்ள மாதம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 52 பேர் கலந்து கொண்டனர். 10 பேர் கண் புரைக்கான இலவச அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும், இந்த முகாமில் 6 பேருக்கு மிக குறைந்த விலையில் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. கடந்த ஜூன் 25ம் தேதி ஈஷாவை அடுத்துள்ள செம்மேடு கிராமத்திலும், ஜூலை 16ம் தேதி விராலியூர் கிராமத்திலும் ஜூலை 30 ம் தேதி மத்வராயபுரத்திலும் செப் 10 ம் தேதி ஆலந்துறையிலும் இதே போன்ற கண் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றது. கிராம பகுதிகளில் மக்களின் நலன் கருதி இது போன்ற கண் பரிசோதனை முகாம்கள் அடுத்தடுத்து நடக்கவிருக்கின்றது.

மேலும், இந்த முகாமில் 6 பேருக்கு மிக குறைந்த விலையில் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. கடந்த ஜூன் 25ம் தேதி ஈஷாவை அடுத்துள்ள செம்மேடு கிராமத்திலும், ஜூலை 16ம் தேதி விராலியூர் கிராமத்திலும் ஜூலை 30 ம் தேதி மத்வராயபுரத்திலும் செப் 10 ம் தேதி ஆலந்துறையிலும் இதே போன்ற கண் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றது. கிராம பகுதிகளில் மக்களின் நலன் கருதி இது போன்ற கண் பரிசோதனை முகாம்கள் அடுத்தடுத்து நடக்கவிருக்கின்றது.