தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவை மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது. கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல், மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கோவையில் சிறுவாணி, கோவை குற்றாலம் போன்ற பகுதிகளில் வெள்ளப் பெருக்கத்தால் மூழ்கியுள்ளது. இதனால், மழை தொடர்ந்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவை குற்றாலம் பகுதிகளில் பொதுமக்கள் அனுமதிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழையால், அட்டப்பாடி பகுதியில் நீர் ஓட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது, இதனால், சிறுவாணியில் பகுதியில் நீர் மட்டத்தை அதிகரித்துள்ளது.

மேலும், சிறுவாணி, பில்லூர் மற்றும் பவானி நீர்ப்பாசன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதேபோல், வால்பாறையில் உள்ள அனைத்து நீர்வழிகளும், நீர்வீழ்ச்சிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால், ஆழியாறு மற்றும் சோலையார் அணைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

நேற்றிரவு முதல், மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கோவையில் சிறுவாணி, கோவை குற்றாலம் போன்ற பகுதிகளில் வெள்ளப் பெருக்கத்தால் மூழ்கியுள்ளது. இதனால், மழை தொடர்ந்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவை குற்றாலம் பகுதிகளில் பொதுமக்கள் அனுமதிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழையால், அட்டப்பாடி பகுதியில் நீர் ஓட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது, இதனால், சிறுவாணியில் பகுதியில் நீர் மட்டத்தை அதிகரித்துள்ளது.

மேலும், சிறுவாணி, பில்லூர் மற்றும் பவானி நீர்ப்பாசன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதேபோல், வால்பாறையில் உள்ள அனைத்து நீர்வழிகளும், நீர்வீழ்ச்சிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால், ஆழியாறு மற்றும் சோலையார் அணைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
