அழிந்து கொண்டிருக்கும் நம் நாட்டின் நதிகளை மீட்கும் விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' இயக்கம் நாடெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றது. இந்த இயக்கத்திற்கு நாடெங்கிலும் பல்வேறு அமைப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஊர்காவல்படை தங்களது ஆதரவை அளிப்பதாக தெரிவித்தது. கோவை ஊர்க்காவல் படை கமாண்டர் தனசேகர் தலைமையில், ”நதிகளை மீட்போம்” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் 180 ஊர்க்காவல் உறுப்பினர்களுக்கு நதிகளை மீட்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், நதிகளின் முக்கியத்துவத்தையும், நதிகளை மீட்கும் விஞ்ஞான விளக்கங்களும் எடுத்துரைக்கப்பட்டது.
இதேபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை குஜராத்தி சமாஜத்திலும் நிகழ்த்தப்பட்டது. இதில், 150 பேர் கலந்துகொண்டனர்.
மேலும், அழிந்து வரும் நதிகளை மீட்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாளை (17.09.2017) மாலை 4 மணி முதல் 6 மணி வரை PROZONE MALL-ல் பாரத நதிகள் என்ற தலைப்பில் வினாடி வினா, கலைநிகழ்ச்சி போட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. கலைநிகழ்ச்சி போட்டியில் 7 முதல் 14 வயதுள்ள குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும். விளையாட்டு போட்டியில் அனைத்து வயது குழந்தைகளும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்புக்கு : 8300057000