இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் 31-ந்தேதிக்குள் அறிவிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மதுரை உயர்நீதிமன்றத்தில்  மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் 45 ஆண்டுகளாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமாக இருந்த இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சின்னத்தை பெறுவதற்காக அ.தி.மு.க. அணிகள் சார்பில் பிரமாண பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ்-சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்ட போது அதிக பெரும்பான்மை உள்ள பிரிவுக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியது.

எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் ஆகியோர் அணியில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டத்தை கூட்டி தேர்தலை நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறும் அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த பிரச்சனை குறித்து தேர்தல் ஆணையம் எத்தனை நாளில் முடிவெடுக்கும் என்பது பற்றி விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று (15.09.2017) நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  இரட்டை இலை சின்னத்தை யாருக்கு? என்பது குறித்து முடிவு எடுப்பதில் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.  இதனைக் கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தாமல் இது போன்ற பிரச்சனைகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

சமாஜ்வாடி கட்சியில் யாருக்கு சின்னம் ஒதுக்குவது என்பது குறித்து 16 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஆனால் இந்த பிரச்சனையில் மார்ச் மாதம் 2 அணிகள் சார்பிலும் மனு கொடுத்தும் தேர்தல் ஆணையம் இதுவரை முடிவு எடுக்காமல் உள்ளது.

எனவே அக்டோபர் 31-ந் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை முடிவெடுத்து தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...