உதகை மலையரசி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்கம்

உதகை மலையரசி கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை மற்றும் தங்கமழை பரிசுத் திட்டத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தீபாவளி 2017 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி இரகங்களுக்கு கோ- ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் இன்று (செப்டம்பர் 15) முதல் வரும் அக்டோபர் 31ம் தேதி வரை 30 சதவிகிதம் அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது.

பட்டு சேலைகள்:-

தமிழகத்தின் காஞ்சிபுரம், கோவை, சேலம், ஆரணி, தஞ்சை போன்ற பல்வேறு இடங்களில் நெசவு செய்யப்படும் புதிய வடிவமைப்புகளுடன் கூடிய மென் பட்டு சேலைகள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

பருத்தி சேலைகள்:-

தீபாவளி 2017 சிறப்பு விற்பனைக்காக பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட உயர்ரக பருத்தி சேலைகள், கோவை காட்டன், கோரா காட்டன் சேலைகள், நெகமம், காஞ்சி காட்டன், காரைக்குடி செட்டிநாடு காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன், சேலம் காட்டன், ஜெயங் கொண்டம் சேலைகள் போன்ற பாரம்பரியமான பருத்தி சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி இரகங்கள்:-

ஏற்றுமதி இரங்களுக்கான படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், ஹோம் ஃபர்னிஷிங் இரகங்கள் குஷன் கவர்கள், குவில்ட் போன்ற ஏற்றுமதி தரத்தில் அழகிய வடிவமைப்புகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது உதகை விற்பனை நிலையம் ரூ.105.77 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது. நடப்பு ஆண்டிற்கு தீபாவளி 2017-க்கு ரூ.130 லட்சங்கள் உதகை விற்பனை நிலையத்திற்கு விற்பனை இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ர.நடரஜன், துணை மண்டல மேலாளர் (தணிக்கை) ஆர்.மோகன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை உதகை விற்பனை நிலைய மேலாளர் பொறுப்பு எஸ்.சபீனாநாஸ் மற்றும் இதர பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...