போரூர் சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட குண்டர் சட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை போரூரையடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் எதிர்வீட்டில் குடியிருந்த தஷ்வந்த் என்ற மென்பொறியாளரை போலீசார் கைது செய்தனர். 

இதனிடையே, தஷ்வந்தை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தஷ்வந்த் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

குற்றவாளி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், தனது மகன் கைது செய்யப்பட்ட 90 நாட்கள் வரையில் எந்தவித குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, தஷ்வந்த் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த மனு, நீதிபதி செல்வம் மற்றும் கலையரசன் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உரிய பதில் அளிக்காததால், குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

தஸ்வந்த் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறுகையில், 'நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சரியான வழியில் குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர போராடுவேன். எனது உறவினர்களும், நண்பர்களும் இந்த வழக்கை விட்டு விடுமாறு கூறினர். ஆனால், இவர் போன்ற குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாடச் செய்தால், பல குழந்தைகளின் வாழ்க்கை சீரழிந்துவிடும்' என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...