டிடிவி தினகரன்தான் உண்மையான துரோகி - பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து, தினகரன் அறிவித்த நியமனங்கள் செல்லாது என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :-  யார் நினைத்தாலும் நம்மை அழிக்க முடியாது. பிரிந்த இயக்கம் ஒன்றிணைந்த வரலாறு இல்லை, ஆனால் நாம் இணைந்துள்ளோம். பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதிக்காதது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. ஜெயலலிதா இல்லாத நிலையில் நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

நம்மை விமர்சிக்க தினகரனுக்கு தகுதி இல்லை. உண்மையில் தினகரன் தான் துரோகி. தினகரனை கட்சியை விட்டு நீக்கி வைத்தவர் ஜெயலலிதா. 1000 தினகரன் வந்தாலும் கட்சி, ஆட்சியை அசைக்க முடியாது. அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத தினகரன் எங்களை எப்படி நீக்க முடியும். ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள் நாங்கள் தான்.

தமிழகத்தில், 2வது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்தது அதிமுகதான். இதற்கான பெருமை ஜெயலலிதாவை சேரும். ஜெயலலிதா இல்லாத நிலையில், ஒன்றிணைந்த நம்மை யாராலும் பிரிக்க முடியாது. எந்த தேர்தல் வந்தாலும் ஜெயலலிதாவின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். திமுக தலைவராக கூட முடியாத ஸ்டாலினால் எப்படி முதலமைச்சராக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...