ஈஷா அவுட்ரீச், சோழா குழுமம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து ஈஷா யோகா மையத்திற்கு அருகில் உள்ள ஆலந்துறை அரசுப் பள்ளியில் இலவச கண்பரிசோதனை முகாம் நடத்தியது.
இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கண் தொடர்பான குறைபாடுகளை பரிசோதனை செய்து கொண்டனர். இதில், 13 பேர் கண்புரைக்கான இலவச அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும், இந்த முகாமில் 20 பேருக்கு மிக குறைந்த விலையில் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது.
கடந்த ஜூன் 25-ம் தேதி ஈஷாவை அடுத்துள்ள செம்மேடு கிராமத்திலும், ஜூலை 16-ம் தேதி விராலியூர் கிராமத்திலும், ஜூலை 30-ம் தேதி மத்வராயபுரத்திலும் இதேபோன்ற கண்பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன.
கிராமபகுதிகளில் மக்களின் நலன்கருதி இதுபோன்ற கண்பரிசோதனை முகாம்கள் அடுத்தடுத்து நடக்கவிருப்பதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கண் தொடர்பான குறைபாடுகளை பரிசோதனை செய்து கொண்டனர். இதில், 13 பேர் கண்புரைக்கான இலவச அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும், இந்த முகாமில் 20 பேருக்கு மிக குறைந்த விலையில் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது.
கடந்த ஜூன் 25-ம் தேதி ஈஷாவை அடுத்துள்ள செம்மேடு கிராமத்திலும், ஜூலை 16-ம் தேதி விராலியூர் கிராமத்திலும், ஜூலை 30-ம் தேதி மத்வராயபுரத்திலும் இதேபோன்ற கண்பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன.
கிராமபகுதிகளில் மக்களின் நலன்கருதி இதுபோன்ற கண்பரிசோதனை முகாம்கள் அடுத்தடுத்து நடக்கவிருப்பதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.