புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் 5-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் இந்தத் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் சங்கத்தினரும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒப்பாரி வைத்து விநோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை கைவிடுமாறு போலீஸார் அறிவுறுத்தியும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் 5-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் இந்தத் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் சங்கத்தினரும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒப்பாரி வைத்து விநோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை கைவிடுமாறு போலீஸார் அறிவுறுத்தியும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.
