கோவை கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூரில் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து நிகழ்ந்ததற்கு இயற்கை சீற்றங்களன்று மனித தவறுகளே மிக முக்கிய காரணமென்று, நிபுணர்களின் கருத்துக்களோடு சிம்ப்ளிசிட்டி செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், பேருந்து நிலைய கட்டிடம் கட்டியதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும், அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும் ககன் தீப் சிங் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.