நிரம்பி வழியும் நிலையில் அவினாசி குளம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீரை திறந்து விடும் அதிகாரிகளை தடுக்கும் பொதுமக்கள்

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அசனெல்லி பாளையத்தில் இருக்கும் குளமும் இந்த மழையால் முதல் முறையாக நிரம்பியது. 



இதனால் குளத்தில் இருந்து வெளியேறும் நீர் வழக்கமாக செல்லும் பாதையை விட்டு விலகி, குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்றது. எனவே, சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல,  அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், குளத்தின் அருகே இருக்கும் குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தி விட்டு, குளத்தில் இருந்து நீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நகராட்சியின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

குளம் நீரின்றி வறண்டு கிடந்த போது பொதுமக்கள் அதிகாரிகளின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாகவும், தற்போது குளத்தில் இருந்து நீரை வெளியேற்றினால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். 

இதனால், நேற்று (10,09,2017) இரவு பொதுமக்கள் ஏராளமானோர் போரட்டத்தில் ஈடுபட்டதால், குளத்தில் இருந்து நீரை வெளியேற்றும் முடிவை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். 

இதேபோல, அதே பகுதியில் உள்ள தாமரைக்குளம் நிரம்பிய போதும், அதிலிருந்து நீரை வெளியேற்றவும், குளத்தை தூர்வாருவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதைக் கண்டித்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...