தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அசனெல்லி பாளையத்தில் இருக்கும் குளமும் இந்த மழையால் முதல் முறையாக நிரம்பியது.

இதனால் குளத்தில் இருந்து வெளியேறும் நீர் வழக்கமாக செல்லும் பாதையை விட்டு விலகி, குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்றது. எனவே, சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல, அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், குளத்தின் அருகே இருக்கும் குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தி விட்டு, குளத்தில் இருந்து நீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நகராட்சியின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குளம் நீரின்றி வறண்டு கிடந்த போது பொதுமக்கள் அதிகாரிகளின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாகவும், தற்போது குளத்தில் இருந்து நீரை வெளியேற்றினால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதனால், நேற்று (10,09,2017) இரவு பொதுமக்கள் ஏராளமானோர் போரட்டத்தில் ஈடுபட்டதால், குளத்தில் இருந்து நீரை வெளியேற்றும் முடிவை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.
இதேபோல, அதே பகுதியில் உள்ள தாமரைக்குளம் நிரம்பிய போதும், அதிலிருந்து நீரை வெளியேற்றவும், குளத்தை தூர்வாருவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதைக் கண்டித்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனால் குளத்தில் இருந்து வெளியேறும் நீர் வழக்கமாக செல்லும் பாதையை விட்டு விலகி, குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்றது. எனவே, சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல, அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், குளத்தின் அருகே இருக்கும் குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தி விட்டு, குளத்தில் இருந்து நீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நகராட்சியின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குளம் நீரின்றி வறண்டு கிடந்த போது பொதுமக்கள் அதிகாரிகளின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாகவும், தற்போது குளத்தில் இருந்து நீரை வெளியேற்றினால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதனால், நேற்று (10,09,2017) இரவு பொதுமக்கள் ஏராளமானோர் போரட்டத்தில் ஈடுபட்டதால், குளத்தில் இருந்து நீரை வெளியேற்றும் முடிவை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.
இதேபோல, அதே பகுதியில் உள்ள தாமரைக்குளம் நிரம்பிய போதும், அதிலிருந்து நீரை வெளியேற்றவும், குளத்தை தூர்வாருவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதைக் கண்டித்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.