கோவையில் 3-வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்

புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 



இந்நிலையில், கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகம், அரசு பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்கள் 1000 -க்கும் மேற்பட்டோர் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். 



போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில செயலாளர் செந்தில் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், " பழைய ஒய்வூதியம் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், நீட் தேர்வுக்கு முழு விளக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும்.



நாளை (12.09,2017) ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டமும், புதன்கிழமை திட்டமிட்டப்படி காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். மாநில அரசு உடனடியாக தங்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்". இவ்வாறு அவர் கூறினார். 

அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக 90 சதவிகிதம் அரசு துறை சார்ந்த பணிகள் கோவையில் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...