"நதிகள் மீட்போம்" இயக்கத்திற்கு தமிழக அரசின் முழு ஆதரவு உண்டு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

"நதிகளை மீட்போம்" பிரச்சாரக் குழுவினருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு - நதிகளை மீட்கும் பேரணிக்கு விவசாய சங்கத்தலைவர்கள் ஒருமித்த ஆதரவு அழிந்து வரும் நதிகளை மீட்டு, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய "நதிகளை மீட்போம்" என்னும் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் உருவாகியுள்ளது. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, நதிகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 30 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பேரணியில், சத்குரு நாடு முழுவதும் தாமே சுமார் 7,000 கி.மீ. தூரம் வாகனம் ஓட்டிசெல்கிறார். அவரோடு, வழியில் பொதுமக்களும், பல தலைவர்களும், பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். இந்த பயணம் அக்டோபர் 2ம் தேதி தில்லியில் முடிவடைகிறது. இந்த விழிப்புணர்வு பேரணி 16 மாநிலங்களின் வழியாக செல்லும். 20க்கும் மேற்பட்ட நகரங்களில் பிரச்சார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், 16 மாநிலங்களின் முதலமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

தமிழகத்தில் கோவை, மதுரை, கன்னியாகுமாரி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மேலும், புதுச்சேரி மற்றும் சென்னையிலும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 

இந்த நிலையில், கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய "நதிகளை மீட்போம்" விழிப்புணர்வு பயணம் மதுரை, குமரி, திருவனந்தபுரம், திருச்சி, புதுவை, கோபி, மைசூரு மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களை கடந்து நேற்று (10,09,2017) சென்னையில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.



நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாபெரும் விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த பேரணிக் கூட்டத்தில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு, முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி, துணை முதலமைசச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன் மற்றும் அப்போலோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி, நடிகை .சுஹாசினி மணிரத்தினம், நடிகர் விவேக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதில், பிரபல பாடகர்கள் உஷாஉதுப் மற்றும் கார்த்திக் ஆகியோரின் கோலாகலமான இன்னிசை நிகழ்ச்சிகளும் நடந்தது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில், இந்த பேரணியில் சென்னையுடன், தான் தமிழகத்திலிருந்து வெளியேறுவதால், தான் தில்லி செல்லும் வரை அனைவரிடமும் இந்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



இவரைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், நீர் வளங்களைக் காக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களைப் பட்டியலிட்டதோடு, தமிழக அரசின் முழு ஆதரவும் இந்த நதிகள் மீட்பு இயக்கத்திற்கு உண்டு என்றார்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...