மாணவி அனிதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும், அரசியல்வாதிகள் பல கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன், மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிப்பதாக டுவிட்டர் பக்கத்தில் கூறி இருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் மாணவி அனிதாவின் வீட்டிற்கு இன்று (11.09.2017) நேரில் சென்று,  அனிதாவின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார். நடிகர் விஜயின் இந்த வருகை அனிதா குடும்பத்திற்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த குழுமூர் கிராமத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எவ்வித போலீசார் பாதுகாப்பும் இன்றி தனது நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் விஜய் மிக சாதாரணமாக வருகை தந்தது பொதுமக்களை திகைப்பில் ஆழ்த்தியது.



மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள், தன்னார்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயின் இந்த திடீர் விஜயம், மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினி, கமல்ஹாசனை தொடர்ந்து மக்கள் சார்ந்த பொது பிரச்சனைகளில் நடிகர் விஜயின் தொடர் பங்களிப்பு தமிழக அரசியல் சூழ்நிலையில் வேறுவிதமாக பார்க்கப்படுகிறது.



Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...