தொடர் கனமழையால் குன்னூர் தரைப்பாலம் சேதம் - போக்குவரத்து பாதிப்பு

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை. ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இந்த நிலையில்,  கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் எனப்படும் மரப்பாலம் உடைந்தது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மேட்டுப்பாளையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. தரைப்பாலத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால், சில மணி நேரங்களில் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  



குன்னூர் தாலுக்காவில் பல இடங்களில் பெய்து வரும் கனமழையால், மண் சரிவும், மரங்களும் விழுந்துள்ளதால் போக்குவரத்து லேசாக பாதிக்கப்பட்டுள்ளது. துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். 

மேலும், கனமழை காரணமாக, குன்னூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மண்சரிவின் காரணாக ஊட்டி- குன்னூர் இடையே மட்டும் மலை ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் இயக்கப்படுகிறது

Newsletter

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...