புதிய திட்டங்களை அமல்படுத்தி வரும் கோவை மாநகராட்சிக்கு "சிறந்த மாநகராட்சி"-க்கான விருது

இந்தியா முழுவதுமுள்ள மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சிக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சி என்னும் பட்டத்தினை கோவை மாநகராட்சி சார்பில் தில்லியில் நடைபெற்ற 49 ஸ்காச் விழாவில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பெற்றார்.

கோவை மாநகராட்சியின் "ஸ்மார்ட் ட்ரீ" என்னும் திட்டத்தினை பாராட்டும் விதமாகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் ஸ்மார்ட் ட்ரீ குறித்தாக விளக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற நடுவர்கள் கூறுகையில், இந்தியாவில் ஸ்மார்ட் ட்ரீ திட்டமானது புதுவிதமான திட்டம் என்றும், இதுபோன்ற திட்டங்களை இன்னும் வேறு மாநிலங்களில் செயல்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டனர். மேலும், கோவை மாநகராட்சியின் இந்த திட்டமானது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் பின்பற்ற வேண்டும் என்று நடுவர்கள் குறிப்பிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, சிறந்த மாநகராட்சிக்கான விருது கோவை மாநகராட்சி மற்றும் புனே மாநகராட்சிக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...