செல்பி விபரீதம்: கோத்தகிரி நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த நிலையில் மீட்பு


நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கேத்தரீன் நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று (செப்., 9) சுற்றுலா பயணியான மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் அந்த நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்றுள்ளார். 

அப்போது, எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்த அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அங்குவந்த மீட்புப் படையினர் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், அங்கு மழை பெய்யத் துவங்கியதை அடுத்து தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலையில் தீயணைப்புப் படையினர், ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 



இதனிடையே, கேத்தரீன் நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்க பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...