"கோ கிரீன் கோவைபுதூர்" கோவையில் முதன் முறையாக 42 கி.மீ. மராத்தான்


கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான மாரத்தான் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 42 கி.மீ. தொலைவு முழு மாரத்தான் போட்டியை கோவைபுதூர் ரன்னர்ஸ் கிளப், கோவைப்புதூர் ஆர்கிட் கேட்டேட் கம்யூனிட்டி ராகிண்டோ ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) கோவையில் நடத்தியது. 



பல்வேறு சமூக நலன்களுக்காக பல்வேறு விதமான மாரத்தான் போட்டிகள் கோவை நகரில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற இந்த 42 கி.மீ. தொலைவு மாரத்தான் கோவையில் நடைபெற்ற முதல் தொலைதூர மாரத்தான் போட்டியாகும். இந்தப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், முதியோர், பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் பங்கேற்றனர். இவர்களுக்கு 5 கி.மீ. 10 கி.மீ. 21 கி.மீ. 42 கி.மீ. பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. பசுமையான கோவைபுதூரை உருவாக்குவதுதான் இந்தப் போட்டிகளின் பிரதான நோக்கம் என்கின்றனர் இதன் ஒருங்கிணைப்பாளர்களான சி. ராஜசேகர், விக்னேஷ், சரவணன், பிரபு, பீட்டர், ஸ்.கவிப்ரியா, ரீனா, மாயா, பிரிஸில்லா, மேரி ஆகியோர்.

கடந்த சில ஆண்டுகளாக கோவைபுதூர் தனது பசுமையை இழந்து வருகிறது. இதற்கு வேகமான நகரமயமாக்கலே முக்கியக் காரணமாக உள்ளது. பசுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் சுமார் 1300 பேர் பங்கேற்றனர். போட்டிகளில் எட்டு வயது குழந்தை முதல் 80 வயது முதியோர் வரை பங்கேற்று, ஓடினர். மேலும், கென்யா நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றனர். போட்டிகளில் பங்கேற்றோருக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 



போட்டிகளை போட்டி ஒருங்கிணைப்பாளர்களும், திமுகவை சேர்ந்த வீ. அறுமுகப்பாண்டி ஆகியோர் துவக்கி வைத்தனர். லையன்ஸ் கிளப்பை சேர்ந்தவர்கள் 5 கி.மீ. தொலைவு மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தனர். 



கோவைபுதூரில் துவங்கிய இந்தப் போட்டிகள், சிபிஎம் கல்லூரி, பஞ்சாரா ஹில்ஸ், ஜெ.ஆர்.டி ஹில்ஸ் ஆகியவை வழியாக சென்றன. இந்தப் போட்டியில் பங்கேற்றோருக்கு டீ-சர்ட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியின் இலக்கை வெற்றி கரமாக எட்டிய நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்றோருக்கு 1.8 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் டி.எம். அன்பரசன், நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.பி.கிருஷ்ணகுமார், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வெற்றி பெற்றவர்களை கௌரவித்தனர்.

42 கி.மீ மாரத்தான் போட்டியில் முதல் பரிசை 2.49.40 வினாடிகளில் கடந்து வினோத் குமாரும், இரண்டாம் பரிசை 2.54.53 வினாடிகளில் கடந்து பீட்டரும் மூன்றாம் பரிசை டி.சிவா வென்றார்கள். 21 கி.மீ மாரத்தான் போட்டியில் 1.13.04 வினாடிகளில் கடந்து பி.நாகேஷ் முதல் பரிசையும், 1.16.27 வினாடிகளில் கடந்து மைக்கேல் டிவோட் இரண்டாம் இடத்தையும், மூன்றாம் பரிசை கிருஷ்ணராஜ் வென்றார்கள். 21 கி.மீ பெண்கள் பிரிவில் 1.35.00 வினாடிகளில் கடந்து முதல் பரிசை எஸ்.பத்மாவதியும், 2.10.09 வினாடிகளில் கடந்து இரண்டாம் பரிசை எஸ்.தாரனியும், மூன்றாம் பரிசை என். கார்த்திகாவும் வென்றனர்.

10 கி.மீ ஆண்கள் போட்டியில் 38.15 நிமிடங்களில் கடந்து முதல் பரிசை நரேஷ் குமாரும், இரண்டாம் பரிசை சசி குமாரும், மூன்றாம் பரிசை பிரபுவும் வென்றனர். பெண்கள் பிரிவில் 1.46 நிமிடங்களில் கடந்து ஆர்.சினேகா முதல் பரிசையும், ஏ. தமிழ்அரசி பரிசையும் எம். தூனியா மூன்றாம் பரிசையும் வென்றனர்.

5 கி.மீ ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை எஸ்.கிருபாகரனும், இரண்டாமிடத்தை சஞ்சய்யும், மூன்றாமிடத்தை ஹேமந்த்தும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் கார்த்திகா முதல் இடத்தையும், சுவாதிஸ்ரீ இரண்டாமிடத்தையும், மூன்றாமிடத்தை எஸ்.மாலனியும் பிடித்தனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...