கோவையில் புளூ வேல் விளையாடிய பள்ளி மாணவர்: கவுன்சிலிங் கொடுக்கும் போலீசார்

சமீபத்தில் உலகம் முழுவதும் ‘புளூவேல்’ என்ற இணைய தள விளையாட்டு பரவியது. இதில், இளைஞர்களும், மாணவர்களும் தங்களை பதிவு செய்து விளையாடி வருகின்றனர். ‘புளூவேல்’ விளையாட்டில் 50 சவால்கள் அளிக்கப்படுகிறது.

ரயில் பாதையில் ரெயில் வரும் போது நின்று செல்பி எடுப்பது, பேய் படம், ஆபாச படம் பார்ப்பது, நடுநிசியில் மயானம் செல்வது என தினம் ஒரு சவால் விடுக்கப்படுகிறது. இந்த சவாலை செய்பவர்கள் அதனை இணையத்தில் பதிவு செய்கின்றனர். ஏற்கனவே, விளையாடுபவர்களை பற்றிய முழுமையான தகவல்களை விளையாட்டு நிர்வாகிகள் பெற்றுள்ளனர்.

50-வது நாள் விளையாடுபவர்கள் தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். அவர்கள் தற்கொலை செய்யாவிட்டால் அவர்களைப் பற்றிய ரகசியம் வெளியிடப்படும் என்று மிரட்டப்படுகின்றனர். இதற்கு பயந்து பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் ‘புளூவேல்’ விளையாட்டு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்த விளையாட்டு இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த விளையாட்டின் மூலம் இந்தியாவில் தற்கொலை அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

எனவே, ‘புளூவேல்’ விளையாட்டுகளால் மாணவ, மாணவிகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் போலீஸார் கவுன்சிலிங் அளித்து வருகின்றனர். மேலும், இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் 104 என்ற உதவி எண்ணை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன ஒரு பகுதியாக, கோவையில் புளூவேல் விளையாட்டை  விளையாடிய பள்ளி மாணவர் ஒருவருக்கு போலீசார் கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர் அன்னூரை அடுத்த மூலகுரும்பபாளையம் பகுதியை சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவர், கடந்த சில தினங்களுக்கு முன் புளுவேல் விளையாட்டினை விளையாட தொடங்கியதாக தெரிகிறது.

பள்ளி மாணவர் இந்த விளையாட்டு செயலியை அறிந்த அன்னூர் போலீசார், அந்த மாணவர் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு அறிவுரை கூறி பாதிப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.  தொடர்ந்து, புளூ வேல் விளையாட்டை இனி விளையாட வேண்டாம் என்றும் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...