கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.,வின் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருப்பவர் நா.கார்த்திக். இவர் இன்று (09,09,2017) காலை கோவை பெர்க்ஸ் பள்ளி - திருச்சி சாலை இணைப்பு சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த லாரி ஒன்று எம்.எல்.ஏ கார்த்திக்கின் கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் எந்தவித காயமின்றி உயிர் தப்பினர்.

இது தொடர்பாக, லாரி ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.