மியான்மரில் தொடர்ந்து நடைபெற்று வரும் காட்டுமிராண்டித்தனமான மத வெறி மனித இனப்படுகொலையை கண்டித்து கோவை மாவட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இன்று மாலை 5 மணியளவில் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் முகமது முசீர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மியான்மர் மதவெறி படுகொலைகளை உடனடியாக தடுக்க ராஜிய ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், பல வருடங்களாக விசாரணையின்றி சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லீம்களை விடுதலை செய்யவும், முஸ்லீம், கிருஸ்துவ வழிபாட்டு தலங்கள் கட்ட அனுமதி வழங்கவும், கபர்ஸ்தான், கல்லறைத் தோட்டங்களுக்கு நிலம் வழங்கவும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக கிளையை தமிழகத்தில் துவக்கிடவும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ஜெரோம் ரோட்ரிக்ஸ், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் புனிதா மற்றும் இந்து, கிருஸ்த்துவர் மற்றும் முஸ்லீம் மதங்களை சார்ந்த அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மியான்மர் மதவெறி படுகொலைகளை உடனடியாக தடுக்க ராஜிய ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், பல வருடங்களாக விசாரணையின்றி சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லீம்களை விடுதலை செய்யவும், முஸ்லீம், கிருஸ்துவ வழிபாட்டு தலங்கள் கட்ட அனுமதி வழங்கவும், கபர்ஸ்தான், கல்லறைத் தோட்டங்களுக்கு நிலம் வழங்கவும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக கிளையை தமிழகத்தில் துவக்கிடவும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ஜெரோம் ரோட்ரிக்ஸ், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் புனிதா மற்றும் இந்து, கிருஸ்த்துவர் மற்றும் முஸ்லீம் மதங்களை சார்ந்த அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.