மியான்மரில் மத வெறி மனிதப் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

மியான்மரில் தொடர்ந்து நடைபெற்று வரும் காட்டுமிராண்டித்தனமான மத வெறி மனித இனப்படுகொலையை கண்டித்து கோவை மாவட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இன்று மாலை 5 மணியளவில் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் முகமது முசீர் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மியான்மர் மதவெறி படுகொலைகளை உடனடியாக தடுக்க ராஜிய ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், பல வருடங்களாக விசாரணையின்றி சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லீம்களை விடுதலை செய்யவும், முஸ்லீம், கிருஸ்துவ வழிபாட்டு தலங்கள் கட்ட அனுமதி வழங்கவும், கபர்ஸ்தான், கல்லறைத் தோட்டங்களுக்கு நிலம் வழங்கவும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக  கிளையை தமிழகத்தில் துவக்கிடவும் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ஜெரோம் ரோட்ரிக்ஸ், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் புனிதா மற்றும் இந்து, கிருஸ்த்துவர் மற்றும் முஸ்லீம் மதங்களை சார்ந்த அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...