கோவை மாவட்டம் சோமனூரில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தின் மேற்கூரை வியாழக்கிழமை மதியம் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி தாரணி, அரசு பேருந்து நடத்துனர் சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு கட்டிடம் தரமில்லாமல் கட்டியதே காரணம் என பொதுமக்களும், இறந்தவர்களின் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.
இதனை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேலும், விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூற நேரில் சென்றார். அப்போது, பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் அமைச்சரை முற்றுகையிட்டதால் அவர் அங்கிருந்து உடனடியாக புறப்படும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த கோம்பக்காடு புதூரை சேர்ந்த கல்லூரி மாணவி தாரணியின் இல்லத்திற்கு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் சென்று அரசு தரப்பில் வழங்கப்பட்ட ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அதனை ஏற்க மறுத்த மாணவியின் உறவினர்கள், அரசின் மெத்தன போக்காலும், தரமில்லாத கட்டிடத்தால் இந்த உயிரிழப்பு எற்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
இதனால், சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ், கருமத்தம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் மகாலிங்கம், அரசு அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதனை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேலும், விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூற நேரில் சென்றார். அப்போது, பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் அமைச்சரை முற்றுகையிட்டதால் அவர் அங்கிருந்து உடனடியாக புறப்படும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த கோம்பக்காடு புதூரை சேர்ந்த கல்லூரி மாணவி தாரணியின் இல்லத்திற்கு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் சென்று அரசு தரப்பில் வழங்கப்பட்ட ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அதனை ஏற்க மறுத்த மாணவியின் உறவினர்கள், அரசின் மெத்தன போக்காலும், தரமில்லாத கட்டிடத்தால் இந்த உயிரிழப்பு எற்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
இதனால், சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ், கருமத்தம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் மகாலிங்கம், அரசு அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.