அரசின் நிவாரணத் தொகையை வாங்க மறுப்பு - சோமனூர் விபத்தில் உயிரிழந்தவரின் வீட்டில் இருந்து வெளியேறிய எம்எல்ஏ.

கோவை மாவட்டம் சோமனூரில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தின் மேற்கூரை வியாழக்கிழமை மதியம் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி தாரணி, அரசு பேருந்து நடத்துனர் சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு கட்டிடம் தரமில்லாமல் கட்டியதே காரணம் என பொதுமக்களும், இறந்தவர்களின் உறவினர்களும் குற்றம்சாட்டினர். 

இதனை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

மேலும், விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூற நேரில் சென்றார். அப்போது, பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் அமைச்சரை முற்றுகையிட்டதால் அவர் அங்கிருந்து உடனடியாக புறப்படும் நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த கோம்பக்காடு புதூரை சேர்ந்த கல்லூரி மாணவி தாரணியின் இல்லத்திற்கு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் சென்று அரசு தரப்பில் வழங்கப்பட்ட ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். 

அதனை ஏற்க மறுத்த மாணவியின் உறவினர்கள், அரசின் மெத்தன போக்காலும், தரமில்லாத கட்டிடத்தால் இந்த உயிரிழப்பு எற்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. 

இதனால், சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ், கருமத்தம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் மகாலிங்கம், அரசு அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...