தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு மாதாந்திர தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டியினை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்யாசத்தின் மீதான வட்டியினை வருடத்திற்கு ஐந்து மாதம் மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து, அரசு ஆணை வழங்கியுள்ளது.
அரசு அளித்துள்ள இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கோவை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட திட்டங்களில் தவணை முறையின் மூலம் மனை, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள் மட்டும் தாங்கள் ஒதுக்கீடு பெற்ற கோவை வீட்டு வசதிப்பிரிவு அலுவலகத்தை அணுகி வட்டி தள்ளுபடி போக மீதம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் செலுத்தி விற்பனை பத்திரம் பெற்று பயனடையுமாறு கோவை வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
அரசு அளித்துள்ள இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கோவை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட திட்டங்களில் தவணை முறையின் மூலம் மனை, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள் மட்டும் தாங்கள் ஒதுக்கீடு பெற்ற கோவை வீட்டு வசதிப்பிரிவு அலுவலகத்தை அணுகி வட்டி தள்ளுபடி போக மீதம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் செலுத்தி விற்பனை பத்திரம் பெற்று பயனடையுமாறு கோவை வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.