நீலகிரியில் கோழிப்பண்ணை, வீட்டுதோட்டம் அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கோழிப்பண்ணை, வீட்டுதோட்டம் ஆகியவை அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழங்குடியின மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் வெவ்வேறு இடங்களில் கோழிப்பண்ணை மற்றும் வீட்டுத்தோட்டம் அமைக்க மாவட்ட ஆட்சியர் அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கரிக்கையூர், பங்களாபடிகை ஆகிய பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு கோழிபண்ணை வைப்பதற்கான இடத்தையும், கடினமாலா ஊராட்சிக்குட்பட்ட கோத்திமுக்கு பகுதியில் வாழும் பழங்குடியினருக்கு வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான இடத்தினையும் ஆய்வு செய்தார்.

மேலும், பழங்குடியினரிடையே இத்திட்டத்தைப்பற்றி எடுத்துக்கூறி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மெட்டுக்கல்  பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உணவு இருப்புகள் மற்றும் சமையலறையையும், மற்றும் பங்களாபடிகை ஊராட்சி ஒன்றியபகுதியில் உள்ள துவக்கப் பள்ளியையும், சோலூர் மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) பழனிசாமி, உதவி இயக்குநர் (கிராம ஊராட்சி) மேகநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...