நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கோவை வழக்கறிஞர்கள் இன்று ரயில் மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.

ரயில் நிலையத்திற்குள் புகுந்த வழக்கறிஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கேரளாவில் இருந்து வந்த அலப்பி-பொக்ரோ ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயில் மீது ஏறிய வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தண்டபாணி கூறுகையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவில்லை எனில் மீண்டும் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ரயில் நிலையத்திற்குள் புகுந்த வழக்கறிஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கேரளாவில் இருந்து வந்த அலப்பி-பொக்ரோ ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயில் மீது ஏறிய வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தண்டபாணி கூறுகையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவில்லை எனில் மீண்டும் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.